Saturday, April 9, 2011

கருப்பா.. அழுக்கா!!

கட்டியணைக்க கருப்பனென்றும் அழுக்கனென்றும்
எண்ணெய் பிசுக்கனென்றுமா இயம்புவேன் ?..
கட்டியணைக்க..


விரல் சுட்டிக் காண்பித்தே பரிகசிக்கும்
வெட்டி வஞ்சியரின் வாய்க்கு அவலானேன்..
கட்டியணைக்க..

திட்டித் தீர்க்கும் தாயின் சொல்லும் தட்டி - தினைத்
தட்டினை வட்டமிடும் சிட்டெனவே வந்தேன்
கட்டிலை நனைத்திடும் கண்ணீரை நிறுத்தி
மட்டிலா மகிழ்ச்சி மனமெங்கும் பொங்க நீ..
கட்டியணைக்க..

3 comments:

  1. காகமும் அவனை நினைவூட்டும் -கரு

    மேகமும் அவனையே நினைவூட்டும்;

    குழலும் அவனை நினைவூட்டும் -கருங்

    குழலும் அவனையே நினைவூட்டும்.



    கறுப்பாவது?அழுக்காவது?பிசுக்காவது?அந்தமாயாவியை ஒருதடவை பாத்துட்டா மத்ததெல்லாம் அவுட்!

    yr's is a real treat!pl sing!

    ReplyDelete
  2. Sure amma.. I have tuned this Behad ragam. Wud soon sing. :) thanks for ur words. :)

    ReplyDelete