Thursday, March 17, 2011

தாக்கம்...




உன் கருமை எனை காந்தமாய் ஈர்க்கிறது..
ஒரு கணம் நீ கண் இமைக்க என் உலகம் இருள் சூழ்கிறது..
உவமை என்ன சொல்ல உன்மீது நான் கொண்ட காதலுக்கு..
உயிர் காற்றுடன் உன்னையும் சேர்த்து சுவாசிக்கிறேன்..
சுவாசம் நிரப்பும் போதெல்லாம் நீ என்னுள் நிறைகிறாய்..
சுவாசம் வெளிவிடும் ஒரு நொடிப் பிரிவையும் தாளேன்..
உயிரே ஒ என் உயிரே..
என்னுள் நீ எவ்வேளையும் இருக்க நான் சுவாசித்தல் போதும்...
உன் நினைவுகள் எனை தழுவ நான் இருப்பேன் தவம்..
தமியனாய் என்றும்...........