கோவிந்தன் குணம் கூவாய் - குயிலே !
கோவிந்தன் குணம் கூவாய் ...
திருமகள் நேயன் ; திகழொளி மார்பன் ..
தீரம் உணர்ந்த தருணமதிலே
வந்தனை செய்வோரின் குந்தகம் நீக்கிடும்;
வாழ்க்கை படகினை கரை தனில் ஏற்றிடும்;
தாசனின் மனதினை காதலில் நெகிழ்த்திடும்;
குணம் கூவாய்; சுகம் காண்பாய் ..
குயிலே !!!
Wednesday, December 8, 2010
குயிலே
Friday, December 3, 2010
வேங்கட ரமணா...
திருமலையில் வாழும் வேங்கட ரமணா..
அருள் மழையை பொழியும் ஆனந்தநிலையா..
மனமொன்று உண்டு மறை புகழும் வேந்தா
உனைஅங்கு வைத்தேன் ஒரு வரம் நீ தாராய்!..
உனைஅங்கு வைத்தேன் ஒரு வரம் நீ தாராய்!..
உனை அன்றி உலகில் உறவேதும் இல்லை ..
உன் நினைவையன்றி உணர்வேதும் இல்லை ..
வனமாலை தரிக்கும் ; வசுதேவன் மைந்தா
தாசனுக்கிரங்க தாமதம் ஏனோ!!
உன் நினைவையன்றி உணர்வேதும் இல்லை ..
வனமாலை தரிக்கும் ; வசுதேவன் மைந்தா
தாசனுக்கிரங்க தாமதம் ஏனோ!!
Subscribe to:
Posts (Atom)