Wednesday, September 8, 2010

Sharat - The Conjurer


தேவன் ஒருவன் வந்தான், தீ நிறத்து ஆடையில்
திக்கெட்டும் தெளித்தான் தெவிட்டாத இன்பங்களை!!

பனிக்காற்று வருட இலக்கின்றி திரிந்தோம்
ஒன்றாய் கழித்த தருணங்கள்
உறைந்து கிடக்கின்றன உள்ளத்தில்.. dd

கால நேரம் தெரியாது அவன் காட்டும் அன்பிற்கு
அன்பைத்தவிர வேறொன்றும் தெரியாது அவனுக்கு

என் பற்று போதவில்லை
அவன் அளித்த நேசவரவை நிகர் செய்ய.. dd
இருநாள் விடைபெற்ற போது
மறுநாள் பார்ப்பது உறுதி!
இறுதிநாள் விடைபெற்றேன்
என்று பார்ப்பேன் என்றறியாத வெறுமையுடன்
அறையில் வந்தமர்ந்தேன் தனிமையுடன் ..

அவனுடன் இருந்ததென்ன வெறும்
ஏழு மணிநேரமா ? - இல்லை
எத்தனையோ நொடிப்பொழுது வாழ்க்கைகள் ! dd

இவையெல்லாம் என்ன மிகைபடுத்தல்களா ? - இல்லை
அவனளவு நேசிக்க முடியாத தாபத்தின் வெளிப்பாடு !

இந்த பிரிவு என்ன சாபமா? - இல்லை
இறைவன் என்மேல் கொண்ட செல்ல கோபம் ... dd

No comments:

Post a Comment