Sunday, August 29, 2010

காத்திருப்பு


கடைக்கண் காண காலம் இன்னும் கனியவும்
வேண்டுமா? குமரா..!

மாலைப் பொழுதினில் - வான்
நீல மயிலின் மிசை - பூக்
கோல குறமகளை
காதலிக்கும் கருணை .. (கடைக்கண்..)

குன்று தோறும் கோயில் கொண்டாள்பவனே
என்னையிங்கு ஆள மறந்தனையோ!
கடும் வெயிலிலும் உறை பனியிலும்
உனை காண ஏங்கித் தவிக்கின்றேன்!
துணையிங்கு நீயே ! துயர் தனை துடைப்பாயே ! (கருணை கடைக்கண்..)

No comments:

Post a Comment